பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மட்டு. மாணவன்

 
 

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான தேவேந்திரன் மதுஷிகன் (வயது-20) பாக்குநீரிணையை நீந்திக்கடந்து சாதனை படைத்துள்ளார்.

நேற்று (28) அதிகாலை 01 மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த தேவேந்திரன் மதுஷிகன், பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்குமிடையேயுள்ள சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தை பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மன்னார் மாவட்ட சாரணர் இயக்க ஆணையாளர் ஸ்ரான்லி டிமேல் லெம்பேட் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அவரை வரவேற்றனர்.

மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...