மஹிந்தவை பிரதமராக்கும் செய்தியில் உண்மையில்லை

ஜனாதிபதியிடம் SLPP கோரவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு புதிய ஜனாதிபதிக்கு எத்தகைய வேண்டுகோளையும் விடுக்கவில்லையென, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென்றும் குறிப்பிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சதித்திட்டங்களினூடாக பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு தயாரில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி நாட்டு மக்களின் ஆணையைப் பெற்று அப்பதவியை பெறுவதற்கு தயாராகவே உள்ளாரெனத் தெரிவித்த அவர், நாட்டு மக்களுக்காகவே பிரதமர் பதவியை விட்டு அவர் விலகிச் சென்றதாகவும் மக்களின் விருப்பத்துடனே மீண்டும் அந்த பதவிக்கு வருவார் என்றும் தெரிவித்தார். எவ்வாறெனினும் எந்த சதித்திட்டங்களின் ஊடாகவும் அவர் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை, என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...